மென்மையான அவள் கண்களுக்கு என் நெஞ்சை ஊடுருவும் வலிமை எவ்வாறு வாய்த்ததோ; நயன மொழியினும் இனிய மொழி இவ்வுலகில் இல்லையென்றே தோன்றுகிறது, அவள் உதடுகளிலிருந்து வருவது தேவமொழியாக இருக்குமோ, ஏனோ அது என் செவிகளில் விழுவது இல்லை; தாயின் மடியில் உறங்கும் குழந்தைக்கு அவள் தாலாட்டு சத்தமாக தோன்றுவது இல்லை, அவள் கூந்தல் அலைபாயும்போது என் மனதும் துள்ளும் அதிசயம் ஏனோ; இல்லை இது அதிசயமாக இருக்க சாத்தியமில்லை, வண்ணத்து பூச்சிக்கு பூக்கள் பிடிக்கவில்லை என்றால்தான் அதிசயம், அவள் கண்களுக்குள் உறங்கவும் கைகளுக்குள் இறக்கவும் ஏங்கும் நெஞ்சம்.
Thursday, October 13, 2011
இரவுக்கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment