Thursday, October 13, 2011

இரவுக்கவிதை

மென்மையான அவள் கண்களுக்கு என் நெஞ்சை 
ஊடுருவும் வலிமை எவ்வாறு வாய்த்ததோ;


நயன மொழியினும் இனிய மொழி
 இவ்வுலகில் இல்லையென்றே தோன்றுகிறது,


அவள் உதடுகளிலிருந்து வருவது தேவமொழியாக 
இருக்குமோ, 
ஏனோ அது என் செவிகளில் விழுவது இல்லை;


 தாயின் மடியில் உறங்கும் குழந்தைக்கு அவள் 
தாலாட்டு சத்தமாக தோன்றுவது இல்லை,


அவள் கூந்தல் அலைபாயும்போது 
என் மனதும் துள்ளும் அதிசயம் ஏனோ;


இல்லை இது அதிசயமாக இருக்க சாத்தியமில்லை, 
வண்ணத்து பூச்சிக்கு பூக்கள் பிடிக்கவில்லை
 என்றால்தான் அதிசயம்,


அவள் கண்களுக்குள் உறங்கவும் 
கைகளுக்குள் இறக்கவும் ஏங்கும் நெஞ்சம்.

Sunday, October 9, 2011

இரவுக்கவிதை




கண்கள் பேசிடும் பலநூறு வார்த்தைகள்,
புன்னகை சிந்திடும் கவிதைகள் ஆயிரம்,
வாய்மொழி தீட்டிடும் பல லட்சம் காவியம்,
அவள் என்னை தீண்டயில் பாய்ந்திடும் மின்சாரம்,
என் மனம் புரியாதோ தமிழ்மகள் அவளுக்கு,
ஒரு வார்த்தை நீ சொன்னால் நின்றிடுமே என் கிறுக்கல்!!!