Monday, February 21, 2011

தாங்கமாட்டாய்!!!

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!

4 comments:

  1. ரொம்ப நல்ல இருக்கு!! கலக்கிட்ட நண்பா !!

    ReplyDelete
  2. நன்று... ஆனால்..

    அவள் செய்த தவறை நீயும் செய்யாதே...
    காதலியின் மேல் உள்ள பாசத்தால்.. கவிதைகளை பாதியில் விட்டுச்செல்கிறீர்...

    ReplyDelete
  3. @kalaiarasi
    உம்போன்ற ஆதரவாளர்கள் உள்ளவரை என் கிறுக்கல்கள் நிற்காமல் தொடரும்!!!

    ReplyDelete
  4. **வெறுமையின் கனம்
    தாங்க முடியாததாய் இருக்கிறது** this happens very often :) nice poem :)

    ReplyDelete