தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!
ரொம்ப நல்ல இருக்கு!! கலக்கிட்ட நண்பா !!
ReplyDeleteநன்று... ஆனால்..
ReplyDeleteஅவள் செய்த தவறை நீயும் செய்யாதே...
காதலியின் மேல் உள்ள பாசத்தால்.. கவிதைகளை பாதியில் விட்டுச்செல்கிறீர்...
@kalaiarasi
ReplyDeleteஉம்போன்ற ஆதரவாளர்கள் உள்ளவரை என் கிறுக்கல்கள் நிற்காமல் தொடரும்!!!
**வெறுமையின் கனம்
ReplyDeleteதாங்க முடியாததாய் இருக்கிறது** this happens very often :) nice poem :)